Pages

Monday, February 7, 2011

கார்ப்ரேட் கஸ்மாலம்

ஆடுகளம், இதில் நடந்தது என்ன சினிமா நிகழ்ச்சி என்று மட்டுமே நினைக்கிறீர்களா? இல்லை. 
நிஜத்தில் அப்படி ஒருவர் இருக்கிறார்.  வெளியில் உத்தமனைப் போல உருக்கொண்டு உள்ளுக்குள் புகைந்து புகைந்து எரிந்து மற்றவர்கள் 
வளர்ச்சியைக் கண்டாலே காழ்ப்பெடுத்து அலையும் ஒருவர்.  அவரைப் பற்றித்தான் இன்றைய நிஜம் நிகழ்ச்சியில் நாம் பார்க்கப் போகிறோம்.


ஒரு நிகழ்ச்சி - ஒரு பெண் பதிவர் ஏதோ காரணத்தாலோ அல்லது யாருடைய தூண்டுதலாலோ
 எதிர் பதிவு என்ற பெயரில் கொஞ்சம் அதிகமாக கிண்டல் என்ற தொனியில் சீண்டுகிறார். 
ஆனால் அவர் அதைச் செய்யும் முன்பு முறையாகப் போன் செய்து அந்த மனிதரிடமே அனுமதி வாங்கிக் கொண்டு தான் செய்கிறார்.
அந்த மனிதரோ வெளியில் இருந்ததாகவும் ஆனால் எதுவும் படிக்காமல் சரி என்று ஒத்துக் கொள்கிறார்.
நேரம் போகிறது. அந்தப் பெண்பதிவரின் பதிவைப் படித்து விட்டு நம்மவர் என்ன செய்திருக்க வேண்டும் ? பிடிக்கவில்லை என்றால் எடுத்துவிட சொல்லி இருக்கலாம்.
 தனக்கு விளம்பரம் கிடைத்தது என்று தன் "சகா"க்களிடம் இதை இட்டுக் கட்டி தனக்கு உதவுங்கள் என்று கேட்கிறார். 
அந்த நேரத்திலும் அந்தப் பெண்பதிவர் நீங்கள் சொல்லுங்கள் இந்தப் பதிவை நீக்கிவிடுகிறேன் என்ற போதிலும், வேண்டாம் என்று சொல்லி அதைக்  
கிளறி களியாக்கி மார்க்கெட்டில் விற்கிறார்.  புரட்சிப் பெண்ணொருவரும்  கிடைத்த சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்தி வரம்பு மீறாமல் 
அதே நேரம் கோபம் வரும் வகையில் மேலும் நம் கதாநாயகனைச் சீண்டி விடுகிறார்.

இந்த நேரத்தில் தன் சகாக்களிடம் அழுது புரண்டு எனக்கு நேர்ந்த கதியைப் பார்த்தீர்களா என்று ஒப்பாரி வைத்து அவர்கள்
ஆதரவு கோரி அவர்களை நம்ப வைத்து தான் தவறே செய்யாதது போல கொஞ்சம் தாளித்துப் பொங்கிய பொங்கல் போல 
பொங்குவதைப் பார்த்த சகாக்கள் இவருக்கு ஆதரவாக இறங்குகிறார்கள். பின் அது மிகப்பெரிய பிரச்சினையாகப் போனது வேறு விஷயம். 
ஆனால் இத்தனை விஷயங்களும் எழக் காரணம் என்ன ? தன்னுடைய  கீழ்த்தரமான விளம்பர யுக்தியும், மற்றவர்கள் வளரக் கூடாது என்ற எண்ணமும்.

இதே கதாநாயகன் வெளிநாடு வாழ் பதிவர் மருத்துவச் செலவுக்கு உதவ தன் பேங்க் அக்கவுண்ட் நம்பரைத் தந்து   
பணம் கேட்க்கிறார். மக்களும் பணம் அனுப்புகிறார்கள். ஆனால் 
வெளியில் சொல்வது என்ன தெரியுமா ? நான் பதிவு போட்டதால் தான் இவ்வளவு பணம் கிடைத்தது இல்லையென்றால்
இவ்வளோ பணம் கலெக்ட் ஆகியிருக்காது என்று சொல்லிக்கிட்டு அலைகிறார்.

புகழுக்காக இவர் தற்சமயம் செய்யும் இன்னொரு ஃப்ராடுதனத்தை சொன்னால் உங்களுக்கு சொன்னால் வெட்கமாய் போய்விடும்.  
அவர் வெளியிட்ட கவிதை புத்தகம் புத்தகச் சந்தையில் அப்படி விற்றுதீர்த்தது பெரிய சாதனை என்று சொல்லிக் கொள்கிறார். 
ஆனால் மொத்தம் விற்பனையான புத்தகங்களின் 300க்கும் மேற்பட்டதை தானே வாங்கி அந்த கணக்கைக் காட்டி இருக்கிறார். 
இது எப்படியான விளம்பரம் என்பதையும், இத்தனைக் கீழ்த்தனமானவர் யார் என்பதையும் நீங்களே கண்டுபிடிப்பீர்கள் தானே ?