Pages

Monday, February 7, 2011

கார்ப்ரேட் கஸ்மாலம்

ஆடுகளம், இதில் நடந்தது என்ன சினிமா நிகழ்ச்சி என்று மட்டுமே நினைக்கிறீர்களா? இல்லை. 
நிஜத்தில் அப்படி ஒருவர் இருக்கிறார்.  வெளியில் உத்தமனைப் போல உருக்கொண்டு உள்ளுக்குள் புகைந்து புகைந்து எரிந்து மற்றவர்கள் 
வளர்ச்சியைக் கண்டாலே காழ்ப்பெடுத்து அலையும் ஒருவர்.  அவரைப் பற்றித்தான் இன்றைய நிஜம் நிகழ்ச்சியில் நாம் பார்க்கப் போகிறோம்.


ஒரு நிகழ்ச்சி - ஒரு பெண் பதிவர் ஏதோ காரணத்தாலோ அல்லது யாருடைய தூண்டுதலாலோ
 எதிர் பதிவு என்ற பெயரில் கொஞ்சம் அதிகமாக கிண்டல் என்ற தொனியில் சீண்டுகிறார். 
ஆனால் அவர் அதைச் செய்யும் முன்பு முறையாகப் போன் செய்து அந்த மனிதரிடமே அனுமதி வாங்கிக் கொண்டு தான் செய்கிறார்.
அந்த மனிதரோ வெளியில் இருந்ததாகவும் ஆனால் எதுவும் படிக்காமல் சரி என்று ஒத்துக் கொள்கிறார்.
நேரம் போகிறது. அந்தப் பெண்பதிவரின் பதிவைப் படித்து விட்டு நம்மவர் என்ன செய்திருக்க வேண்டும் ? பிடிக்கவில்லை என்றால் எடுத்துவிட சொல்லி இருக்கலாம்.
 தனக்கு விளம்பரம் கிடைத்தது என்று தன் "சகா"க்களிடம் இதை இட்டுக் கட்டி தனக்கு உதவுங்கள் என்று கேட்கிறார். 
அந்த நேரத்திலும் அந்தப் பெண்பதிவர் நீங்கள் சொல்லுங்கள் இந்தப் பதிவை நீக்கிவிடுகிறேன் என்ற போதிலும், வேண்டாம் என்று சொல்லி அதைக்  
கிளறி களியாக்கி மார்க்கெட்டில் விற்கிறார்.  புரட்சிப் பெண்ணொருவரும்  கிடைத்த சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்தி வரம்பு மீறாமல் 
அதே நேரம் கோபம் வரும் வகையில் மேலும் நம் கதாநாயகனைச் சீண்டி விடுகிறார்.

இந்த நேரத்தில் தன் சகாக்களிடம் அழுது புரண்டு எனக்கு நேர்ந்த கதியைப் பார்த்தீர்களா என்று ஒப்பாரி வைத்து அவர்கள்
ஆதரவு கோரி அவர்களை நம்ப வைத்து தான் தவறே செய்யாதது போல கொஞ்சம் தாளித்துப் பொங்கிய பொங்கல் போல 
பொங்குவதைப் பார்த்த சகாக்கள் இவருக்கு ஆதரவாக இறங்குகிறார்கள். பின் அது மிகப்பெரிய பிரச்சினையாகப் போனது வேறு விஷயம். 
ஆனால் இத்தனை விஷயங்களும் எழக் காரணம் என்ன ? தன்னுடைய  கீழ்த்தரமான விளம்பர யுக்தியும், மற்றவர்கள் வளரக் கூடாது என்ற எண்ணமும்.

இதே கதாநாயகன் வெளிநாடு வாழ் பதிவர் மருத்துவச் செலவுக்கு உதவ தன் பேங்க் அக்கவுண்ட் நம்பரைத் தந்து   
பணம் கேட்க்கிறார். மக்களும் பணம் அனுப்புகிறார்கள். ஆனால் 
வெளியில் சொல்வது என்ன தெரியுமா ? நான் பதிவு போட்டதால் தான் இவ்வளவு பணம் கிடைத்தது இல்லையென்றால்
இவ்வளோ பணம் கலெக்ட் ஆகியிருக்காது என்று சொல்லிக்கிட்டு அலைகிறார்.

புகழுக்காக இவர் தற்சமயம் செய்யும் இன்னொரு ஃப்ராடுதனத்தை சொன்னால் உங்களுக்கு சொன்னால் வெட்கமாய் போய்விடும்.  
அவர் வெளியிட்ட கவிதை புத்தகம் புத்தகச் சந்தையில் அப்படி விற்றுதீர்த்தது பெரிய சாதனை என்று சொல்லிக் கொள்கிறார். 
ஆனால் மொத்தம் விற்பனையான புத்தகங்களின் 300க்கும் மேற்பட்டதை தானே வாங்கி அந்த கணக்கைக் காட்டி இருக்கிறார். 
இது எப்படியான விளம்பரம் என்பதையும், இத்தனைக் கீழ்த்தனமானவர் யார் என்பதையும் நீங்களே கண்டுபிடிப்பீர்கள் தானே ?

Thursday, January 27, 2011

நயவஞ்சக காட்டான் 1




மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பதிவர் அவர்.அரசுத்துறை ஒன்றில் முக்கிய பொறுப்பு.வார இதழ்களில் சிற்சில துணுக்குகள்,கதைகள் என்று புனைப் பெயரில் எழுதி சந்தோஷம் கொண்ட அவருக்கு வரமாய் அமைந்தது வலையுலகம். சுமார் 2 வருடங்களுக்கு முன்னர் தானும் ஒரு பிளாக் ஆரமித்து கடையைத் திறந்தார்.பின்னூட்டங்களோடு கூடவே அவருக்கு வக்ரபுத்தியும் வரத்துவங்கியது. தனக்குப் பின்னூட்டமிட்ட பெண் பதிவர்களோடு சாட்டில் பேசத் துவங்குவார். பின் கொஞ்சம் கொஞ்சமாக அது வக்கிரமாக மாறும். இதில் வெறுப்படைந்த ஒரு புரட்சி பெண் புலிப் பதிவர் சமயம் கிடைத்தபோது தனது தோழர்களிடம் சொல்லி அவர்களது கட்டுரையில் இவர் பெயரை பகிரங்கமாகவே எழுதவைத்தார்.
இந்த ஜொள்ளரும் அந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை மறுப்பு தெரிவிக்கவிலை என்பதும் குறிப்பிடத்தக்கது.இதேபோல இந்த ஜொள்ளர் தனது சொந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண் பதிவரிடம் தன் வக்கிர மனத்தைக் காட்ட கொதித்தெழுந்த அந்த பெண் பதிவர்ஜி பதிவு போட்டு டர்ராகக் கிழித்தார்.இத்தனை பட்டும் இன்னும் அவர் திருந்தியதாகத் தெரியவில்லை.இவரைப் பற்றித் தெரியாமல் இவரிடம் போனில் பேசுவதை ரெக்கார்ட் செய்து சக நண்பர்களிடம் போட்டுக்காண்பித்து சிரிப்பதை ஹாபியாக வைத்திருக்கிறது இந்த கிழ ஜென்மம்.
ஒரு பெண்பதிவரிடம் காட்டை சுத்திக்காட்டுறேன் வீட்டை சுத்திக்காட்டுறேன் தனியா வரமுடியுமான்னு கேட்டு இருக்காரு அதன்பிறகு அந்த பெண்பதிவர் இந்த ஆளு பக்கமே திரும்புவது இல்லை. அவரைப்பற்றி விசயம் தெரியாம இன்னும் சில புதிய பெண்பதிவர்கள்  அவரோடு தொடர்பில் இருப்பதுதான் வேதனை. காட்டுக்குள் இருக்கும் இந்த காமக்காட்டானை பற்றிய மேலும் விவரங்கள் வரும். உங்களுக்கு தெரிந்த விவரங்களையும் சொல்லலாம்.

காட்டான் காட்டுக்குள் செய்த அசிங்கங்களை மொபைலில் படம் பிடித்து வைத்திருக்கிறது. அதன் நகல் ஒருவரிடம் இருக்கிறது அதை வாங்கும் முயற்சியில் இருக்கிறோம். விரைவில் சந்திப்போம்.

Wednesday, January 26, 2011

கொள்கையும் நோக்கமும்

செய்தி: பிளாக்கிலீக்ஸ்...இன்றுமுதல் உதயமாகிறது.

எங்கள் நோக்கம்: வலையுலகில் சிலர் செய்யும் தவறுகளை அனைவரிடமும் கொண்டு போய் சேர்ப்பதே.

உங்கள் பங்களிப்பும் எங்களுக்கு தேவை: உங்களுக்கு தெரிந்த பதிவர்கள் சிலர்செய்யும் தவறுகளை வெளியில் சொல்ல முடியவில்லையா? எங்களுக்கு தகவல் கொடுங்கள் நாங்கள் வெளியிடுகிறோம். 

எங்கள் குழு நேரடியாக சேகரித்த தகவல்கள் இருக்கின்றன அவை விரைவில் வெளிவரும்.

“நயவஞ்சக காட்டான்”

”குபீர்குப்ப பதிவர்”

”அபேஸ் பாலைய்யா”

 உங்களுக்கு நன்கு தெரிந்த பதிவரிகளின் முகத்திரைகள் கிழிக்கப்படும். அதன் பிறகு அந்த பிரபலங்களின் முகங்கள் கொஞ்சம் விகாரமாக இருக்கலாம்.



 மேலும் உங்களுக்கு தெரிந்த பதிவர்களை பற்றிய தகவலைக்கூட இங்கு எங்கள் அனானி ஆப்சன் மூலம் சொல்லலாம்.  அல்லது blogileaks@gmail.com  மெயில் கூட எங்களுக்கு அனுப்பலாம். 100% உங்களை முகவரியை வெளியிட மாட்டோம்.

வலைப்பதிவர்களுக்காகவே வலைப்பதிவர்களை பின்னிபெடலெடுக்கப்போகும் இடம்.